மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

30.5.11

காவியக் காதலும்..,கலாச்சார இந்தியாவும்.

 காவியக் காதலர்கள் கண்ணகியும் - கோவலனும்
 கோவலனின் லீலைகளை காணச்சகியா கண்ணீர் சொரிய
 வீடு திரும்பிட்ட கணவனை திடுக்கிட்டு நோக்கி

 எனக்கு திலகமிட்டவரே திரும்பி வந்தீரே?
 இன்பம் திகட்டியதோ  இருப்புப் பணம் தீர்ந்தனவோ?
 இதோ என் சாமரமும் சங்குச் சங்கிலியும்
 சட்டென விற்று சந்தோசத்தில்  திளையுமென்றாள்

 மாதவிகூட மாலைக்கு "மதிப்பளிக்கும்"
 மன்னவனுக்கு மட்டுந்தான்
 மார்பிலே துயிலவும் மஞ்சத்தில் புரளவும்
 மார்க்கம் செய்திருந்தாள்-ஆனால்
 இன்றைய மாதுக்களோ மானங்கெட்டவர்கள்

 கடலோர கடலைக்கும் காரில் பவனிக்கும்-கடலருகே
 கற்புக்கு கலைவிழா நடத்துறீங்க
 கலாச்சார இந்தியாவா இல்லை
 காபிரியேல் கண்டித்த சோதோம் கொமோராவா?

 பெண்களே பெரியவர்கள் என பிரச்சாரம் செய்துவிட்டு
 பின்புறத்து வாசல் வழி பிறனுக்கு பிடிகொடுத்து
 வயிற்றின் பாரத்தை குறைத்துவிட்டு
 மடிப்பணத்தின் கணத்தை "கூட்டிவிட்டாய்"

 ஆடைதனில் தொங்கலிட்டு அங்கங்கே சன்னல் வைத்து
 அங்க அழகுகளை எங்கள்முன் காட்டிவிட்டு
 எதற்கெடுத்தாலும் எங்களையே குற்றம்சாட்டு

 ஆடைகுறைப்பில் ஆணினத்தை சூடேற்றி
 அவன் கைப்பிடித்தான் இவன் இடுப்பொடித்தானென
 எங்கள் மேல் பழிபோடு!
 அரைகுறை ஆடையில் அங்குமிங்கும் அலையும்போது
 அம்போணு விட்டுவிட ஆணினமென்ன அஃறினை ஜாதியா?

 பட்டணத்து பகிடிகள்
 பட்டோடப வாழ்விற்கும் பணப்புழக்கத்திற்கும்
 ஆடம்பர அறைகளிலே படுக்கையை பகிர்ந்துவிட்டு
 காவலர் கைதின்போது கவுரவ குடும்பத்து
 கண்மணிகளென கண்ணீர் வடிக்கிறீங்க
 அடடே..! என்னே ஒரு மாண்பு..!

 கைத்துணியை மடித்து முகத்தை மட்டும் மறைத்து
 பண்பாட்டு இந்தியாவை பலருக்கு மத்தியில்
 பல்லிளிக்கச் செய்திட்டீங்க

 அரசு மருந்தகத்தில்
 கருக்கலைப்பு செய்தோரின்
 அன்றாட எண்ணிக்கை கணக்கின்றிபோயிற்று

 ஒத்துக்கொள்கிறேன்
 பெண்கள்தான் பிறப்பிடம்
 பெண்கள்தான் உறைவிடம்-ஆனால்  இன்று
 பல பெண்களே சாக்கடையின் தேக்கிடமும் கூட..!
        
     மொட்டு :27  மலர்ந்தது :16-01- 2004

2 கருத்துக்கள்:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

பெண்களின் முன்னேற்றம் என்பது கலாசரச் சீரழிவு அன்று!

Anonymous said...

எதுக்குய்யா இப்படிப் பெண்களைக் கேவலபடுத்தறீங்க?

Post a Comment