மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

22.5.14

அழகிய மான்

அழகே அழகா
எனக்கே முதலா?
ஐதர் கால புதையல் நீயா?
ஊசியின் காதில்
ஓசையின்றி நுழையும் நூல்போல் உள்ளத்தில் நுழைந்து
மையம் கொண்ட தையலே
கண்ணை மட்டும் தந்துவிட்டு
ஒளியினைப் பறித்துக் கொண்டாய்
கைத்தடியாக வருவாயா ?
காலமெலாம் கரைசேரப்பாயா
மறுத்து நீ முறைப்பாயோ ?
என் மானமதை காப்பாயா
மனம் புழுங்க விடுவாயோ

19.5.14

மழை

விவசாயி விம்மல்  கண்
விருந்து வைத்தது
மேகம் !