மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

18.12.11

முள்ளுப்பெரியார்

விழுதுகள்தான் விண்ணை நோக்கி
ஆலமரத்தை பிடித்துள்ளது போல்
ஏமாளித்த‌ன‌ந்தான் ந‌ம் த‌மிழரனைவ‌ரையும்
ஏந்திப்பிடித்துள்ள‌து போலும்!
பிச்சை போட்டு பிழைத்த‌த‌னை
ம‌ற‌ந்துவிட்டான் ம‌னித‌ன்...
மாக்க‌ள் போல‌ மாறும‌ன‌ம்
காட்டிவிட்டான் இன்று..!
க‌னிருசித்த‌ க‌ள‌வாணி
விதையிட்ட‌வ‌னை உதைத்தான்
விம்முகின்ற‌ விவ‌சாயி வேத‌னை எவ‌ன‌றிவான்..!

5.10.11

இழப்புணி‍_ஓர் அறிமுகம்


நீங்கள் இழப்புணியை சந்தித்ததுண்டா?
  என்ன முழிக்கிறீர்கள்?  இழப்புணி என்பவர் கணவன்,குழந்தை ஆகியோரையும் சொத்தையும்,பணத்தையும் இழந்த பெண்ணைக் குறிக்கும் பதமாகும்.

சொல்லும் ‍_சொல்லாடலும்

     இல்லாமை எனும் நிலைமை இயலாமை மற்றும் முயலாமை என்ற ஆளுமை கொண்ட குடும்பத்தலைவன் (அ) தலைவியால் வருதலால் இல்லாண்மை எனும் மேலாண்மை இல்லாது போய்விடுகிறது.

சொல்லொன்று; பொருளிரண்டு..!


அஃகுள்_அக்குள்,கக்கம்
அகடச்சக்கரம்_இடுப்புஅணி(இடைவார்),கொடுங்கோல்வேந்தன்
அகடம்_அநீதி
அகத்தடியாள்_வீட்டுவேலைக்காரி,மனைவி
அகம்மியை_இழிகுலப்பெண்,பொதுமகள்(பரத்தை)
அகர்முகம்_வைகைறைப்பொழுது,விடியற்காலம்
அகலிடம்_பூமி,பரந்தநில உலகம்
அகவாட்டி_மனைவி,இல்லாள்
அகவேற்றம்_பஞ்சம்,தானியப் பற்றாக்குறை

அகாலமரணம்-ஓர் சொல்லாட்சி

         நாம் அடிக்கடி சுவரொட்டிகளில் சிலர் இறந்ததை "அகாலமரணம்" அடைந்தார் என படித்திருப்போம்.இச்சொல்லை சிறியவர்,பெரியவர் என வித்தியாசமின்றி பயன்படுத்தியிருப்பர்.ஆனால் உண்மையில் அகாலமரணம் என்பது இளம்வயது சாவை மட்டுமே குறிக்கக்கூடியது.ஏனெனில் அவர் இயல்பாக அனைவரும் உயிருடன் வாழ்ந்திருக்க வேண்டிய நாட்களை,சுகதுக்கங்களை இழந்துவிட்டதால்

3.10.11

துகிலுரித்தாலென்ன?


உன் புடவைகளை
சுத்தமாய்ப் பிடிப்பதில்லை-என்னைவிட
உன்னில் நெருங்கி உறவாடுகிறதே?

யுகயுகமாய்...!


என் பாட்டி சொல்லியது
நான் தும்மிய போது
எனக்கு ஆயுசு நூறென்று
இந்த அற்ப ஆயுசு போதாதெனெக்கு
ஓரிரு யுகமாவது வேண்டும்
உன்னோடு நான் வாழ..!

வேல்விழி...!


கன்னியர் கண்களை
வேல்விழிக்கு ஒப்பிடுகின்றனரே
"முள்போல்" குத்துவதாலா?

மருவிய பேத்தி


மேற்கண்ட "சொற்றொடரைப் (அல்லது) தலைப்பை" நீங்கள் படித்ததும் "பேத்தி எதைக்கண்டு மருவினாள்" என கேட்கத் தோன்றுகிறது அல்லவா? அதற்கு விளக்கம் கீழ்க்கண்டவாறு அமைகிறது.

  "பெயர் சொல்ல வந்தவள்" எனும் பொருள் கொண்ட தமிழ் வார்த்தையான "பெயர்த்தி" தான் "பேத்தி"யாக மருவியுள்ளது மனிதர்களின் காலச்சூழலில்.

24.9.11

பணம்



கழுதை தின்னும் காகிதம்
கடவுளுக்கு நிகரானதோ?
இக்கலியுலகில்.....!

17.9.11

எல்லாம் உன்னால் வந்த வினை


உன்னால் எனக்கொரு
அந்தஸ்து கிடைத்துவிட்டது
என்னவென்று சொல்லவா? -"கவிஞன்"

அறவும் துறவும்


சிந்தனையை கூறுவைத்து
சிவதவம் பூண்டிருந்தேன்
போதிமரம் தேடி போகலாமென்றிருந்தேன்

சிரிக்கி நீ வந்து
சித்தத்தை கிளறிவிட்டாய்
ஆறாத ரணமொன்றை அழகாய் உருவாக்கி

என்னுள் கொழுத்துவிட்டாய்
எண்ணங்கள் எடுத்துக்கொண்டாய்
குறிஞ்சி மலரொன்றை கூந்தலில் நீ சூடி

மூச்சிரைக்க ஓடிவந்தாய் முடியழகே
மோட்சம் நான் கண்டேனே- சற்று
முந்திச் சென்ற பேருந்தால்....!

வண்டமிழே தேன்மொழியே
வாய்மொழி நீ பேச
வாயொழுகி நான் நின்றேன்

ஈக்களின் எண்ணிக்கை எதிரில் கண்டு
வருவோரும் போவோரும்
வசைமாரி பொழிந்து செல்ல

துப்பாக்கி சுடுவோன் போல்
உன்னையே குறி கொண்டேன் - ஆயினும்
உன்னால் நான் சூடுபட்டேன்

வாளினை வீசிவிட்டாய்
வாழ்வினை கூறுபோட்டாய் - நெஞ்சினில்
வாசனை மரம் நட்டாய் 

கர்வத்தை உடைத்தெறிந்து
கனவுலகை ஆக்கிரமித்து கடையேழு வள்ளல்போல்
கொடைமாரி பொழிகின்றாய்

பூவே நீ வந்து விடு
பூப்பறிக்க வந்து விடு
புதுவாழ்வு தந்து விடு

இறைவா..! இறைஞ்சுகின்றேன்
இழிவாய் எனை நினைக்காதே - இது
உன்னால்தான் வந்த வினை

ஒப்பற்ற ஓரழகை
ஏன் உலவ விட்டாய்
என் கண் முன்னே..!

வாடி வதங்குகின்றேன்
வரமொன்று கொடுத்துவிடு
வாழ்வின் பெருந்தவத்தை

வசமாக்கி கொடுத்துவிடு
வார்த்தை தவறிவிட்டால்
வடக்கிருக்க நான் செல்வேன்..!

9.9.11

மனமே..!சம்மதமா?

மனமே..!சம்மதமா?
மதம் கொண்ட களிறுபோல
மலையழகி மோதியென்னை
என் மனக்கதவை தகர்த்துவிட்டாள்

சிவனேயென நானிருந்தேன்
விதியொன்று விளையாடி
மதிமயங்கி மண் கிடந்தேன்

மாலையிட வருவாயா
சேலையிடை காட்டியெனை
செக்குமாடாய் செய்த பெண்ணே!

விழியழகி உனைக்கண்டு
விழித்துவிட்ட விரலொன்று
கவியெழுதத் துடிக்குதடி - தினம்
கனவு கண்டு மயங்குதடி

சிந்தித்து சிந்தித்து
சிதறிவிட்ட சிறு கடலில்
முத்தெடுக்க முயன்ற நானும்
மூழ்கி மூழ்கி தத்தளித்தேன்

சிறுகொடியாள் உனை நானும்
சிறைப்பிடிக்க சீறுகொண்டேன்
கைகள் படபடத்து
கலக்கம் பல நான் கொண்டேன்
நெஞ்சின் நினைவுகளால்                 நித்தம் நித்தம் கிறக்கம் கொண்டேன்

விரலிடையில் நூல்முடியால்
விருத்தமாக நினைக்கின்றேன்
வாழ்வியலின் இருகோடாய்
வாழ்ந்திருக்க சம்மதமா?




21.8.11

நினைவெல்லாம் நீ!


பசுமரத்தாணி போல என்னெஞ்சில் பதிந்திருக்கும்
பருவகால தேவதையாய் நீ இருக்க
பஞ்சுமெத்தை மேனி கொண்ட நீயெனக்கு
பருகிட தந்துவிடு தேன்சிந்தும் உன் உதடுகளை
பக்கத்தில் நீ இருந்தால் பார் மறந்து நானிருப்பேன்!
பகலில் கூட கனவுகண்டு விழித்தெழுந்தார் போலிருப்பேன்
வைரக்கல்லை தோற்கடித்த வான்மதியே-நீ தான்
எனக்காக வேண்டும் வாழ்வின் திருமதியாய்!

9.8.11

ஒலி-ஒளிக்கவிதை(குழந்தை)






நீ எங்கள் சந்தோஷத்தின் சாவி
விடியல் முற்றங்களின் பூக்கோலம்
உனைக் காணத்தான்
மொட்டுக்கள் மலராய் அவிழ்ந்தன
உந்தன் சிரிப்பொலி
எங்கள் ஏழிசை கீதமானது
சூரியனை சுடராக்கி -உன்
மேனியில் சூடிக்கொண்டாய்
பொழுதுகள் பல போக்கி
காரியங்கள் காண மறந்தோம்
கண்ணீர்த் திவலைகள் -உன்னால்
கானல் நீராயின
உன் மழலை மொழி
தேவாரப் பாடலானது
கடவுளின் கொடை நீ -எம்
வாழ்வின் விடை நீ -எம்மை
எடுத்துச் செல்லும் வரலாற்றுப் புத்தகம் நீ            
வானங்கள் உனைக் காண
வானவிலாய் வளைந்தன
நீர்த்துளிகள் உன் குளியலால்
தீட்சை பெற்றன
தெய்வங்கள் உன் வடிவில்
தரிசனம் தந்தன
எங்கள் இன்பத்தின் எவரெஸ்ட் நீ
கையிருப்பின் உண்மையான வைரம் நீ
வாழ்க நீ வளர்க
வளங்களின் வனப்போடு..!

16.7.11

இரண்டாம் சொர்க்கம்


ஒருபைசா செலவின்றி உலக அதிசயம்
பல உன்னில் கண்டேன்
ஒளிசிந்தும் கண்பார்வை 'நயாகரா" எனலாம்
"பாபிலோன்" தோட்டம் இரட்டித்ததோ உன்னில்
பிண்ணிய கார்குழல் சீனப்பெருஞ்சுவரோ.!
பசிபிக்கை ஜெயித்த தேன்சுவை கிண்ணம்
இறக்கத்திலமைந்த "இரண்டாம் சொர்க்கம்"
ததும்பிப் பின்பிதுங்கிய "பெட்ரோனாஸ்"
தாளமிடுகிது தன்னால்
"நைல்நதி" பாயும் "ஆற்றுப்படுகை"
நளினம் பாடுது என்னிரவதனில்
கொடுத்து வைத்த கண்களெனக்கு..!

நம்பிக்கை..!

தெய்வ நம்பிக்கையெல்லாம் எனக்கில்லை
தேவதை உன்னை மட்டுமே
நம்பி வாழ்கிறேன் - நான்!

வானவில்லே வா வா

வானவில் பார்க்க 
மழைக்காலம் வேண்டாம்
உன்னைப் பார்த்தாலே போதும்...!




மோகம்



                                                                                                                               






தண்ணீருக்குகூட உன்மேல் ஆசை போலும்
உச்சியில் விட்ட தண்ணீர்
உள்ளங்கால்வரை வருடிப்பார்க்கிறதே..!

10.7.11

ஏனிந்த ஊழோ?


அன்பே அழகே ஆருயிர் நீயே
ஆயுதமென நீயெனைத் தாக்கி
ஆயுள்ரேகை நீளச் செய்தாய்
அனிச்சை செயலாய் அலையச்செய்தாய்
விழுப்புண் பட்டேன் விரகமானேன்
விடியாத இரவு நான் பல கண்டேன் -உன்
விந்திய மலைகள் விழுங்கப் பார்த்தேன்
மடுவாய் நானும் மாட்டிக்கொண்டேன்
நீல ஓடை நீந்தி வந்தேன்
நிலை தடுமாறி நெக்கென்று விழுந்தேன்
ஈரிதழ் பூவை விரிக்க நினைத்து
விரல் நுனி வேர்த்தது
என் விடியல் நனைந்தது
எத்தனை நாளோ ஏனிந்த ஊழோ?
இனிக்கும் கனிகள் சுவைக்க வருமோ?
ஏக்கம் தந்து ஏமாற்றி விடுமோ
வெள்ளிக் கிண்ணங்கள் விரல் வசப்படுமா
விலையேற்றம் போல் விதி முடிந்திடுமா
விடை சொல் வில்(லே) வேல் விழிப் பெண்ணே..!

7.7.11

கனவுக் கன்னி


நீ இல்லாது நீலவானம் நோக்கினேன் நிலவில்லை
எங்கே விண்மீன்கள் என்றாய்ந்தால்
விண்ணெல்லாம் உன் முகங்கள்-அன்றோ
வெள்ளையனை எதிர்த்து விடுதலை பெற்றோம்-இன்றோ
வெள்ளை மலரே நீ காதல் போராட்டம் செய்கிறாய்
நீ என்னை கைது செய்து மனச்சிறையில் அடைத்தாய்
இலையுதிர்ந்து துளிர்விட்டால் வசந்தம் ஆரம்பம்
பகலிரவு இருபொழுதும் உன்னினைவு ஆரம்பம்
வசந்த காலத்திற்கு முடிவுண்டு
வரும் நினைவுக்கோ முடிவில்லை
பாவையே நீயென்ன பாரிவள்ளல் உறவோ?
பகல் இரவு பாராது
கனவுகளை அள்ளித் தருகிறாய்
நீ வந்து முத்தமிட மறந்தன அனைத்தும்
உன்னைத் தவிர..!

காதல் அழைப்பிதழ்


பதினாறின் பருவமே பவிசு காட்டி காட்டி
ஏனுன் பகிரங்க மனதை
பதை பதைக்க வைக்கிறாய் -
துள்ளலோடு துணை தேடும்
சிட்டுக் குருவியைப் பார் சில்வண்டைப் பார்
எட்டிப்பறக்கும் பட்டாம் பூச்சியைப் பார்
துணை தேடிப் பறக்க - நீ மட்டும்
ஏன் சிறகை உடைத்துக் கொள்கிறாய்
நீலவானில் காதல்கீதம் பாடும்
வானம்பாடி போல் -உன்
துணைதேடி உலகினிலே ஒரு தடவை
காதலிக்கலாம் வா..!
கன்னிப் பருவமதில் கண்விழிகள் கதை சொல்ல
காற்றாடிபோல் சுற்றும் -உன்
மின்சார மனதை கட்டுப்படுத்தலாம்-ஆகவே
காதலிக்கலாம் வா..!
ஒரு சிறகில்லாமல் வானில் பறக்கலாம்
காகிதம் இல்லாமல் கவிதைகள் எழுதலாம்
விழித்திருக்கும் போதே கனவுகள் காணலாம்
கானல் நீர் போன்ற இவ்வாழ்வில்
கண்ணீர் தேவை இல்லை; காதல் மனமே
நிழலான வாழ்வில் நிஜமான மனம் காண
நீயும் நானும் காதலிக்கலாம் வா..!

காதல் சேவகன்


தித்திக்கும் தேமதுரம் சிங்காரப்பூவானம்
பூக்கள் தூவுதடி பூங்குயில் உனக்காக
கீழ்வானம் மஞ்சளரைக்கு கிளியே-நீ குளிக்க
உன் ஓரப்பார்வைக்கு ஒத்திவைத்தேன் -நித்தம்
உன் கண்ணில் நான் வாழ
உன் கண்ணென்ன காந்தமா? -காதலி
உன்னருகே கவர்ந்திழுக்கிறதே என்னை
உன் சிரிப்பில் பூக்கும் மொட்டு நான்
ஓயாது நெஞ்சில் உன்னினைவு மட்டுந்தான்
என் ரத்த அணுக்கள் கரையும் காகமாய்
உன் பேர் சொல்லி
நீ அணியும் ஆடையாகவா? -இல்லை
நீ உரசும் மஞ்சளகாவா?
தேவைக்கு சேவை செய்வேன்
தேரில் உன்னை ஏற்றி வைப்பேன்
தேயாத நிலவாய் ஆகிவிடு
என் வாழ்வில் நீ வந்து
தீபவொளி ஏற்றிவிடு..!

30.6.11

என் உயிர் தோழியே...!


நெற்றிப் பொட்டிட்டு கால் மெட்டிட்டு
கூரப் புடைவைதனை குதிங்கால் வரை சூடி
எந்தன் குலவிளக்காகும் கூதிர்பூவே
நான் செய்யும் சிலநேர ஊடல்களில்
நற்றிணைப் பெண்போல் நாணம் வருமோ?
ஐவகை நிலமதில் எதுவுன் நிலம்
ஐவகை முடிதனில் எதுவுன் முடி
தெருவோர புழுதிகளே அகன்றோடுங்கள் - என்
தேவி இன்று நடை பயில்வாள்
வீதி மரங்களனைத்தும் மலர்கள் பொய்க
பெருமாட்டி பிஞ்சுப் பாதம் நோகாதிருக்க
மெல்ல நடைபயின்று தாழ்திறவாய் எம்பெண்ணே
கொலுசொலி சிணுங்கல்கள் - உன்
நாணத்தை வெளிக்கொணரும்
என் உள்ளம் ஆர்ப்பரிக்கும்
ஊணும் உயிரும் உறவாட
உனை ஈந்தனன் தேவன் எனக்கு
செம்மண் சிந்திய நீரது
அம்மண் கலந்து செவ்வியபோல்
நானும் நின்னும் கலந்தாகுக!

23.6.11

பின்னிரவு பிதற்றல்கள்




பிகாசோ ஓவியங்கள்
பின்னடைவு கண்டதடி
மங்கை உன் பிறையழகால்
மதிமயங்கி மண்ணில் வீழ்ந்தேன்
முழு அழகை காட்டிவிட்டால்
மூச்சு முட்டி இறந்திடுவேன்

சித்தனைப் போல் நானிருந்தேன்
பித்தனைப் போல் பிணியாகி
எத்தனைப் போல் எட்டிப்பார்த்தேன்
எக்குத்தப்பாய் ஆனதடி - ஆண்மை
எரிமலையாய் வெடிக்குதடி
நீ தூங்கி எனையெழுப்பி இதிகாசம் எழுதச்செய்தாய்!

உன் உதட்டுப் பள்ளம்
உமிழ்ந்த எச்சில் மிச்சமாய்
உள்ளிருக்க தவமிருப்பேன்
உலகமதை உனக்களிப்பேன்
உன் கலசமதில் காப்பிடி தேன்
கடன் எடுக்க சம்மதமா?

காரிருளை அழகாக்கி
கார்குழலி துயில்கையிலே
கம்பனென்றும் பைரனென்றும்
ஜனனம் கண்டேன் சடுதியிலே
நரம்பு-முடி சூடாகி நடுஇரவில்
வியர்வையிலே நான் குளித்தேன்

தூரிகை ஒன்று தேடி
எட்டுத்திக்கும் ஏகிச் சென்று
தோற்கலானேன் துவண்டு போனேன்
முன்னழகை வடிக்க வேண்டி
உயிரோவியமாய் உனை வடித்தேன்
உயிர்முடிச்சதிலே கட்டி வைத்தேன்

பிறவிப்பயன் ஈட்டாது
பிணமாவேன் என்றிருந்தேன்
மோகனப் புன்னகையால்
முழுமை கண்டேன் பிறவியிலே
உயிரளித்தாய் உலகழகே
ஒளிவு மறைவில்லா பேரழகால்!