மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

30.6.11

என் உயிர் தோழியே...!


நெற்றிப் பொட்டிட்டு கால் மெட்டிட்டு
கூரப் புடைவைதனை குதிங்கால் வரை சூடி
எந்தன் குலவிளக்காகும் கூதிர்பூவே
நான் செய்யும் சிலநேர ஊடல்களில்
நற்றிணைப் பெண்போல் நாணம் வருமோ?
ஐவகை நிலமதில் எதுவுன் நிலம்
ஐவகை முடிதனில் எதுவுன் முடி
தெருவோர புழுதிகளே அகன்றோடுங்கள் - என்
தேவி இன்று நடை பயில்வாள்
வீதி மரங்களனைத்தும் மலர்கள் பொய்க
பெருமாட்டி பிஞ்சுப் பாதம் நோகாதிருக்க
மெல்ல நடைபயின்று தாழ்திறவாய் எம்பெண்ணே
கொலுசொலி சிணுங்கல்கள் - உன்
நாணத்தை வெளிக்கொணரும்
என் உள்ளம் ஆர்ப்பரிக்கும்
ஊணும் உயிரும் உறவாட
உனை ஈந்தனன் தேவன் எனக்கு
செம்மண் சிந்திய நீரது
அம்மண் கலந்து செவ்வியபோல்
நானும் நின்னும் கலந்தாகுக!

23.6.11

பின்னிரவு பிதற்றல்கள்




பிகாசோ ஓவியங்கள்
பின்னடைவு கண்டதடி
மங்கை உன் பிறையழகால்
மதிமயங்கி மண்ணில் வீழ்ந்தேன்
முழு அழகை காட்டிவிட்டால்
மூச்சு முட்டி இறந்திடுவேன்

சித்தனைப் போல் நானிருந்தேன்
பித்தனைப் போல் பிணியாகி
எத்தனைப் போல் எட்டிப்பார்த்தேன்
எக்குத்தப்பாய் ஆனதடி - ஆண்மை
எரிமலையாய் வெடிக்குதடி
நீ தூங்கி எனையெழுப்பி இதிகாசம் எழுதச்செய்தாய்!

உன் உதட்டுப் பள்ளம்
உமிழ்ந்த எச்சில் மிச்சமாய்
உள்ளிருக்க தவமிருப்பேன்
உலகமதை உனக்களிப்பேன்
உன் கலசமதில் காப்பிடி தேன்
கடன் எடுக்க சம்மதமா?

காரிருளை அழகாக்கி
கார்குழலி துயில்கையிலே
கம்பனென்றும் பைரனென்றும்
ஜனனம் கண்டேன் சடுதியிலே
நரம்பு-முடி சூடாகி நடுஇரவில்
வியர்வையிலே நான் குளித்தேன்

தூரிகை ஒன்று தேடி
எட்டுத்திக்கும் ஏகிச் சென்று
தோற்கலானேன் துவண்டு போனேன்
முன்னழகை வடிக்க வேண்டி
உயிரோவியமாய் உனை வடித்தேன்
உயிர்முடிச்சதிலே கட்டி வைத்தேன்

பிறவிப்பயன் ஈட்டாது
பிணமாவேன் என்றிருந்தேன்
மோகனப் புன்னகையால்
முழுமை கண்டேன் பிறவியிலே
உயிரளித்தாய் உலகழகே
ஒளிவு மறைவில்லா பேரழகால்!