மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

5.10.11

இழப்புணி‍_ஓர் அறிமுகம்


நீங்கள் இழப்புணியை சந்தித்ததுண்டா?
  என்ன முழிக்கிறீர்கள்?  இழப்புணி என்பவர் கணவன்,குழந்தை ஆகியோரையும் சொத்தையும்,பணத்தையும் இழந்த பெண்ணைக் குறிக்கும் பதமாகும்.

சொல்லும் ‍_சொல்லாடலும்

     இல்லாமை எனும் நிலைமை இயலாமை மற்றும் முயலாமை என்ற ஆளுமை கொண்ட குடும்பத்தலைவன் (அ) தலைவியால் வருதலால் இல்லாண்மை எனும் மேலாண்மை இல்லாது போய்விடுகிறது.

சொல்லொன்று; பொருளிரண்டு..!


அஃகுள்_அக்குள்,கக்கம்
அகடச்சக்கரம்_இடுப்புஅணி(இடைவார்),கொடுங்கோல்வேந்தன்
அகடம்_அநீதி
அகத்தடியாள்_வீட்டுவேலைக்காரி,மனைவி
அகம்மியை_இழிகுலப்பெண்,பொதுமகள்(பரத்தை)
அகர்முகம்_வைகைறைப்பொழுது,விடியற்காலம்
அகலிடம்_பூமி,பரந்தநில உலகம்
அகவாட்டி_மனைவி,இல்லாள்
அகவேற்றம்_பஞ்சம்,தானியப் பற்றாக்குறை

அகாலமரணம்-ஓர் சொல்லாட்சி

         நாம் அடிக்கடி சுவரொட்டிகளில் சிலர் இறந்ததை "அகாலமரணம்" அடைந்தார் என படித்திருப்போம்.இச்சொல்லை சிறியவர்,பெரியவர் என வித்தியாசமின்றி பயன்படுத்தியிருப்பர்.ஆனால் உண்மையில் அகாலமரணம் என்பது இளம்வயது சாவை மட்டுமே குறிக்கக்கூடியது.ஏனெனில் அவர் இயல்பாக அனைவரும் உயிருடன் வாழ்ந்திருக்க வேண்டிய நாட்களை,சுகதுக்கங்களை இழந்துவிட்டதால்

3.10.11

துகிலுரித்தாலென்ன?


உன் புடவைகளை
சுத்தமாய்ப் பிடிப்பதில்லை-என்னைவிட
உன்னில் நெருங்கி உறவாடுகிறதே?

யுகயுகமாய்...!


என் பாட்டி சொல்லியது
நான் தும்மிய போது
எனக்கு ஆயுசு நூறென்று
இந்த அற்ப ஆயுசு போதாதெனெக்கு
ஓரிரு யுகமாவது வேண்டும்
உன்னோடு நான் வாழ..!

வேல்விழி...!


கன்னியர் கண்களை
வேல்விழிக்கு ஒப்பிடுகின்றனரே
"முள்போல்" குத்துவதாலா?

மருவிய பேத்தி


மேற்கண்ட "சொற்றொடரைப் (அல்லது) தலைப்பை" நீங்கள் படித்ததும் "பேத்தி எதைக்கண்டு மருவினாள்" என கேட்கத் தோன்றுகிறது அல்லவா? அதற்கு விளக்கம் கீழ்க்கண்டவாறு அமைகிறது.

  "பெயர் சொல்ல வந்தவள்" எனும் பொருள் கொண்ட தமிழ் வார்த்தையான "பெயர்த்தி" தான் "பேத்தி"யாக மருவியுள்ளது மனிதர்களின் காலச்சூழலில்.