மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

9.9.11

மனமே..!சம்மதமா?

மனமே..!சம்மதமா?
மதம் கொண்ட களிறுபோல
மலையழகி மோதியென்னை
என் மனக்கதவை தகர்த்துவிட்டாள்

சிவனேயென நானிருந்தேன்
விதியொன்று விளையாடி
மதிமயங்கி மண் கிடந்தேன்

மாலையிட வருவாயா
சேலையிடை காட்டியெனை
செக்குமாடாய் செய்த பெண்ணே!

விழியழகி உனைக்கண்டு
விழித்துவிட்ட விரலொன்று
கவியெழுதத் துடிக்குதடி - தினம்
கனவு கண்டு மயங்குதடி

சிந்தித்து சிந்தித்து
சிதறிவிட்ட சிறு கடலில்
முத்தெடுக்க முயன்ற நானும்
மூழ்கி மூழ்கி தத்தளித்தேன்

சிறுகொடியாள் உனை நானும்
சிறைப்பிடிக்க சீறுகொண்டேன்
கைகள் படபடத்து
கலக்கம் பல நான் கொண்டேன்
நெஞ்சின் நினைவுகளால்                 நித்தம் நித்தம் கிறக்கம் கொண்டேன்

விரலிடையில் நூல்முடியால்
விருத்தமாக நினைக்கின்றேன்
வாழ்வியலின் இருகோடாய்
வாழ்ந்திருக்க சம்மதமா?




1 கருத்துக்கள்:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

விரலிடையில் நூல்முடியால்
விருத்தமாக நினைக்கின்றேன்

nice lines

Post a Comment