மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

7.7.11

கனவுக் கன்னி


நீ இல்லாது நீலவானம் நோக்கினேன் நிலவில்லை
எங்கே விண்மீன்கள் என்றாய்ந்தால்
விண்ணெல்லாம் உன் முகங்கள்-அன்றோ
வெள்ளையனை எதிர்த்து விடுதலை பெற்றோம்-இன்றோ
வெள்ளை மலரே நீ காதல் போராட்டம் செய்கிறாய்
நீ என்னை கைது செய்து மனச்சிறையில் அடைத்தாய்
இலையுதிர்ந்து துளிர்விட்டால் வசந்தம் ஆரம்பம்
பகலிரவு இருபொழுதும் உன்னினைவு ஆரம்பம்
வசந்த காலத்திற்கு முடிவுண்டு
வரும் நினைவுக்கோ முடிவில்லை
பாவையே நீயென்ன பாரிவள்ளல் உறவோ?
பகல் இரவு பாராது
கனவுகளை அள்ளித் தருகிறாய்
நீ வந்து முத்தமிட மறந்தன அனைத்தும்
உன்னைத் தவிர..!

0 கருத்துக்கள்:

Post a Comment