மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

7.7.11

காதல் சேவகன்


தித்திக்கும் தேமதுரம் சிங்காரப்பூவானம்
பூக்கள் தூவுதடி பூங்குயில் உனக்காக
கீழ்வானம் மஞ்சளரைக்கு கிளியே-நீ குளிக்க
உன் ஓரப்பார்வைக்கு ஒத்திவைத்தேன் -நித்தம்
உன் கண்ணில் நான் வாழ
உன் கண்ணென்ன காந்தமா? -காதலி
உன்னருகே கவர்ந்திழுக்கிறதே என்னை
உன் சிரிப்பில் பூக்கும் மொட்டு நான்
ஓயாது நெஞ்சில் உன்னினைவு மட்டுந்தான்
என் ரத்த அணுக்கள் கரையும் காகமாய்
உன் பேர் சொல்லி
நீ அணியும் ஆடையாகவா? -இல்லை
நீ உரசும் மஞ்சளகாவா?
தேவைக்கு சேவை செய்வேன்
தேரில் உன்னை ஏற்றி வைப்பேன்
தேயாத நிலவாய் ஆகிவிடு
என் வாழ்வில் நீ வந்து
தீபவொளி ஏற்றிவிடு..!

0 கருத்துக்கள்:

Post a Comment