மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

10.7.11

ஏனிந்த ஊழோ?


அன்பே அழகே ஆருயிர் நீயே
ஆயுதமென நீயெனைத் தாக்கி
ஆயுள்ரேகை நீளச் செய்தாய்
அனிச்சை செயலாய் அலையச்செய்தாய்
விழுப்புண் பட்டேன் விரகமானேன்
விடியாத இரவு நான் பல கண்டேன் -உன்
விந்திய மலைகள் விழுங்கப் பார்த்தேன்
மடுவாய் நானும் மாட்டிக்கொண்டேன்
நீல ஓடை நீந்தி வந்தேன்
நிலை தடுமாறி நெக்கென்று விழுந்தேன்
ஈரிதழ் பூவை விரிக்க நினைத்து
விரல் நுனி வேர்த்தது
என் விடியல் நனைந்தது
எத்தனை நாளோ ஏனிந்த ஊழோ?
இனிக்கும் கனிகள் சுவைக்க வருமோ?
ஏக்கம் தந்து ஏமாற்றி விடுமோ
வெள்ளிக் கிண்ணங்கள் விரல் வசப்படுமா
விலையேற்றம் போல் விதி முடிந்திடுமா
விடை சொல் வில்(லே) வேல் விழிப் பெண்ணே..!

1 கருத்துக்கள்:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

இனிக்கும் கனிகள் சுவைக்க வருமோ?
ஏக்கம் தந்து ஏமாற்றி விடுமோ
வெள்ளிக் கிண்ணங்கள் விரல் வசப்படுமா
விலையேற்றம் போல் விதி முடிந்திடுமா
விடை சொல் வில்(லே) வேல் விழிப் பெண்ணே..!

இனிமையான வரிகள்!

Post a Comment