மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

16.6.11

காதல் பரணி

  யாரங்கே?
  மன்னா..!
  இந்த இந்திரலோக ரம்பையை
  அகற்றுங்கள் என்னைவிட்டு
  ரம்பையா..?எங்கே மன்னா?
  ஓ...அவள் என் இதய சிம்மாசனத்தில்
  என்னை இம்சிக்கிறாள்-இவள்
  அந்தப்புறத்தை அழித்துவிடுவாள்
  அவையில் எனை அலைமோதச்செய்வாள்
  இறகு மை இடந்தவறிவிடும்!
  போர்க்களத்தில் பூக்களால் ஆசி செய்தேன் -எதிரியை
  காதல் என்னை கலிங்கத்துப்பரணி அசோகராக்கிவிட்டது
  ஒரு கோமகனுக்கு பெண்ணோடு போராட்டாமா?
  சீக்கிரம் அகற்றுங்கள் இவளை
  என் இதய சிம்மாசனத்திலிருந்து..!

    மொட்டு :31  மலர்ந்தது :ஜனவரி'2005

0 கருத்துக்கள்:

Post a Comment