மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

18.12.11

முள்ளுப்பெரியார்

விழுதுகள்தான் விண்ணை நோக்கி
ஆலமரத்தை பிடித்துள்ளது போல்
ஏமாளித்த‌ன‌ந்தான் ந‌ம் த‌மிழரனைவ‌ரையும்
ஏந்திப்பிடித்துள்ள‌து போலும்!
பிச்சை போட்டு பிழைத்த‌த‌னை
ம‌ற‌ந்துவிட்டான் ம‌னித‌ன்...
மாக்க‌ள் போல‌ மாறும‌ன‌ம்
காட்டிவிட்டான் இன்று..!
க‌னிருசித்த‌ க‌ள‌வாணி
விதையிட்ட‌வ‌னை உதைத்தான்
விம்முகின்ற‌ விவ‌சாயி வேத‌னை எவ‌ன‌றிவான்..!

0 கருத்துக்கள்:

Post a Comment